web log free
February 08, 2026

மனைவிக்கு குழந்தை வரம் கொடுக்காததால்  மாதா சிலைகளை உடைத்து சேதப்படுத்திய கணவன்!

மனைவிக்கு குழந்தை இல்லாததால் வேதனையில் துடித்ததாகவும் அதனால் கடவுளிடம் கேட்டும் கிடைக்காத வெறுப்பில் மாதா சிலை மீது கற்களை வீசி சிலைகளையும், அவை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அறைகளையும் சேதப்படுத்திய கணவனை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விகாலை தெற்கு சவுல்கட்டு பகுதியைச் சேர்ந்த கே செல்வகுமார் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒரு கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மானிப்பாய் உதயபுரம் ஆணைக்கோட்டை பகுதியின் சந்திகளிலும், அப்பகுதி வீடுகளுக்கு முன்பாகவும் வைக்கப்பட்டிருந்த 6 கன்னி மரியா சிலைகளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸாரின் விசாரணைகளின் விளைவாக தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd